tamilnadu

img

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உளுந்தூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை, ஆக. 12- கள்ளக்குறிச்சி மாவட்டம் மதியனூர் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் பாச னத்திற்கு பயன்படும் பெரிய ஏரி உள்ளது.  அந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்பட வில்லை. மேலும் ஏரியை சிலர் ஆக்கிர மித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  விவசாயிகள் சங்கம் சார்பில் உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரு நாவலூர் கிழக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.குடியரசுமணி தலைமையில் புதனன்று (ஆக. 12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, ஒன்றி யச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஆறுமுகம், குமார், வெங்கடேசன், முருகன், செந்தில், தாமோதரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்ட னர். ஏரியை தூர் வாரி, குடிமராமத்து பணி களை மேற்கொள்ள வேண்டும், ஆக்கிர மிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும், நகர் விமான தளத்தில் இருந்து  ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.