கர்நாடக விவசாயிகள் விவசாய மசோதாக்களை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரத்தின் பல பகுதி சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பாஜக ஆளும் கர்நாடக முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று காலை புதிய விவசாய மசோதாக்களை எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். விவசாயி அல்லாதவர்களுக்கு கூட விவசாய நிலங்களை வாங்குவதை நிலையை உருவாக்குகிறது. விளைபொருட்களை வாங்குவதற்கான விதிகளை பட்டியலிடும் ஏபிஎம்சி சட்டத்தின் திருத்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். பல இடங்களில் நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.