tamilnadu

img

கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் அனைத்துவிதமான கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கல்லூரிக்கு வர இயலாத மாணவர்கள் இணைய வழியில் தங்களது வகுப்புகளைத் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.