tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

கரூர், ஆக.6- கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் டாஸ்மாக் மாவட்ட மேலாள ரிடம் சங்க மாவட்ட தலைவர் ஏ.பத்மஸ்ரீ காந்தன் தலைமையில் கோரிக்கை  மனு வழங்கப்பட்டது. கொரோனாவால் பாதிக் கப்பட்டு உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதை போல், டாஸ்மாக் ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழி யர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டுள் ளது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பிச்சைமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.