tamilnadu

நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி முக்கிய செய்திகள்

காவல் துறைக்கான தனி அமைச்சகம் அமைக்க ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள்  நல சங்க மாநாடு கோரிக்கை
நாகர்கோவில், செப்.22-கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நல சங்க முதலாம் ஆண்டு விழா நாகர்கோவில் பி.டி.பிள்ளை திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.  ஆண்டுவிழாவுக்கு, சங்க தலைவர் பென்சிகர் தலைமை வகித்தார். ஆறுமுகம் வரவேற்றார். செயலாளர் சுகுமாரன் அறிக்கை சமர்ப்பித்தார். சங்க பொருளாளர் பாலசுப்பிரமணி யம் பொருளாளர் அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட மகிளா நீதிபதி ஜாண். ஆர்.டி.சந்தோஷம், உதவிகாவல் கண்கா ணிப்பாளர் ஜவகர், தமிழ்மாநில ஓய்வுபெற்ற காவல் ஆளி னர்கள் நல சங்க தலைவர் சக்திவேல், பாண்டிச்சேரி மாநில ஓய்வுபெற்ற காவலர்கள் சங்க தலைவர் துளசி சிங்கம், கேரள மாநில போலீஸ் ஓய்வூதியர்கள் சங்க தலைவர் வேணு கோபால், சங்கத்தின் சட்ட ஆலோசகர் மரிய ஸ்டீபன் ஆகி யோர் பேசினர். புதுச்சேரி மாநில ஓய்வுபெற்ற காவலர் நல சங்க துணை தலைவர் பாண்டுரெங்கன் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.  1963 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதுபெற்ற மறைந்த தலை மைக்காவலர் அனந்தம்பி செல்லையாவை கவுரவித்து அவ ரது மகன் ஓய்வுபெற்ற சிறப்பு உதவியாளர் ஜோசப் ராஜ மணியிடம் நினைவுபரிசு வழங்கப்பட்டது. சீனாவில் நடை பெற்ற உலக காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டியில் பட்டம் வென்ற பெண் காவலர் கிருஷ்ண ரேகாவுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. சங்க துணைத்தலைவர் நன்றி கூறினார்.  விழாவில், காமராஜர் ஆட்சியில் இருந்தது போன்று காவல் துறைக்கான தனி அமைச்சகம் உடனடியாக அமைக்க வேண்டும், மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் காவ லர்களின் வாரிசுகளுக்கு ஏற்கனவே உள்ளது போன்று 10 சத வீதம் இடஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையிலான காவலர்களை தவிர தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரி களின் தனிப்பட்ட குடும்ப வேலைகளுக்கு மற்ற காவ லர்களை பயன்படுத்தகூடாது, ஓய்வு பெற்ற அனைத்து காவ லர்களுக்கும் மருத்துவ காப்பீடு மாதாந்தர தொகை பிடித்த திலிருந்து விலக்களித்து மருத்துவ காப்பீட்டு பலன்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லாரி மோதியதில் மீன் வியாபாரி பலி
தூத்துக்குடி, செப்.22-ஈரோடு புதுமை காலனியைச் சேர்ந்தவர் முருகன் (50). மீன் வியாபாரியான இவர் வெள்ளியன்று தனது மினி லாரியில் தூத்துக்குடிக்கு சென்று மீன்களை மொத்தமாக வாங்கி னார். பின்னர் அவற்றை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு, சனி யன்று அதிகாலையில் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். அந்த மினிலாரியை ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ் (37) ஓட்டிச் சென்றார். மினி லாரியில் முருகன் மகன் பாலகணேஷ் (21), தொழிலாளர்களான ராஜன் (50), ராஜா மகன் கார்த்திக் (17), சாந்தி (55) ஆகியோரும் சென்றனர். அதிகாலை 4.30 மணி அளவில் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் நாற்கரசாலை பாலம் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மினி லாரி மோதியது.  இதனால் நிலைதடுமாறிய மினி லாரி சாலையோர தடுப்பு கம்பியில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகன் மற்றும் பாலகணேஷ், ராஜன், கார்த்திக் ஆகிய 4 பேரையும் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் டிரை வர் சதீஷ், சாந்தி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக காய மின்றி உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

நாங்குநேரி தொகுதியில் 36 வாக்குச்சாவடி பதற்றமானவை நெல்லை ஆட்சியர், மாவட்ட எஸ்பி பேட்டி
திருநெல்வேலி, செப்.22-நாங்குநேரியில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என நெல்லைஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாவட்டஎஸ்பி, அருண் சக்திகுமார் ஆகியோர் பேட்டியின் போது கூறினர்.  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சனிக் கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாவட்டஎஸ்பி., அருண் சக்திகுமார் ஆகியோர் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி நடே சன் செயல்படுவார் எனவும், தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் விக்கிர வாண்டி, நாங்குநேரி ஆகியதொகு திகளுக்கு அக்.21 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அக்.24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் . இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர்.30ஆம் தேதி தொடங்கப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர்.3ம் தேதி கடைசி நாள் ஆகும் .நாங்குநேரி தொகுதியில் தேர்தல் நன்னடைத்தை விதி கள் 21ம்தேதி முதல் அமல் ஆகிறது. பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவ ணங்கள் வைத்திருக்க வேண்டும் என நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் பேட்டியின் போது கூறினார்.  மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் கூறும் போது நாங்கு நேரியில் மொத்தம் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக் குச்சாவடிகள் பதற்றமானவை. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க காவல்துறை அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் என கூறினார்.