நாகர்கோவில், ஜூன் 24- குமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி மீது சமூக வலைத்தளங்கள் மூல மாக இளம்பெண்களை தொடர்புகொண்டு காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனியாக இருப்பதை ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்ற ச்சாட்டுகள் எழுந்தன. அதையொட்டி பாதிக்க ப்பட்ட சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரில் காசி கைது செய்ய ப்பட்டார். இதை தொடர்ந்து நான்கு பெண்க ளும் ஒரு இளைஞரும் கொடுத்த புகாரில், ஒரு போக்சோ வழக்கு 2 பாலியல் பலாத்கார வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என ஆறு வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டது. இதனிடையே காசி குண்டர் சட்டத்தில் கைதானார். மேலும் இந்த வழக்குகள் சிபிசி ஐடி காவல் துறையினர் வசம் ஒப்படை க்கப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் காசியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டதன் அடிப்படையில் ஐந்து நாள் காவல் துறையினர் காவல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறை யினர் காசியிடம் தீவிர விசாரணை மேற்கொ ண்டனர். காசியின் சிபிசிஐடி காவல் முடிந்ததை தொடர்ந்து காசி மற்றும் அவரது நண்பர் டைசன் ஜினோ ஆகியோர் மீண்டும் சிறை யில் அடைக்கப்பட்டனர். காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில் காசி கொடுத்த தகவலின் அடிப்படையில் கணேசபுரம் பகுதியில் அவரது வீட்டின் அருகில் உள்ள தினேஷ் என்ற வாலிபரை செவ்வாயன்று சிபிசிஐடி காவல் துறை யினர் கைது செய்தனர். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தினேஷிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் ஒன்றை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர். அந்த போனை ஆய்வு செய்த போது பல ஆபாச படங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. காசி உடன் கூட்டணி சேர்ந்து இவரும் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என சிபிசிஐடி காவல் துறையினர் சந்தே கிக்கின்றனர். இதனை தொடர்ந்து காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து பறிமுதல் செய்த செல்போனை சைபர் கிரைம் காவல் துறையி னரிடம் ஆய்வுக்காக கொடுத்துள்ளனர்.