tamilnadu

img

விவசாயிகள் , வாலிபர் சங்கத்தினர், ஊர்மக்கள் குளத்தை தூர்வாரினர்

 நாகர்கோவில், செப்.2- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே திருவரம்பு பகுதியில் செறுவட்டு குளம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக பயன்பட்டு வரும் இந்த குளத்தை இந்த பகுதியில் ஊர் மக்கள், விவசாயிகள் தூர்வாரி பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தை தூர்வாருவதாக கூறிக்கொண்டு மண் திருடும் கும்பல் ஒன்று குளத்தின் மடையை உடைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தது.  இதனை அறிந்த அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வாலிபர் சங்கத்தினர் குளத்தின் நீரை அகற்றி மண் திருட முயன்ற கும்பலை விரட்டியடித்தனர். இதையடுத்து விவசாயிகள் சங்கம், வாலிபர் சங்கத்தினர் மற்றும் ஊர்மக்கள் இணைந்து குளத்தில் உள்ள பாசியை அகற்றி தூர்வாரினர்.  இதில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் ஆர்.வில்சன், ஜெயக்குமார், வாலிபர் சங்க நிர்வாகி சந்தோஷ், விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.