நாகர்கோவில், ஜுலை 8- கைத்தறி நெசவாளர்கள் கொரோனா நிவாரணமாக ரூ.2000 பெற விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலம் கைத்தறி மற்றும் கைத்தறி பட்டுநெசவு மேற்கொள்ளும் நெசவாளர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை ரூ. 2,000 வழங்க ஆணை வழங்கப்பட்டுள்அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நெசவாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெறாத 200 யூனிட் விலையில்லா மின்சாரம் பயன்பெற்று வரும் நெசவாளர்கள் விண்ணப்பமனு ஆதார் அட்டைநகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், தமிழ்நாடு மின்சார வாரிய அட்டை மற்றும் கடைசியாக செலுத்திய மின் கட்டண ரெசீது நகலுடன் மாவட்டஆட்சியர் அலவலக இணைப்புகட்டிடம், 2ஆம் தளம், நாகர்கோவில் முகவரியில் அமைந்துள்ள உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறைஅலுவலகத்திலோ (அல்லது) அருகில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலோ விண்ணப்பங்களை 2 நாட்களுக்குள் வழங்குமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.