tamilnadu

img

கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க அரசு தயார் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நாகர்கோவில், ஜூலை 19- கொரோனா நோயாளி களுக்கு ஆயுர்வேத முறைப் படி சிகிச்சையளிக்க அதிகா ரப்பூர்வமாக கோரிக்கை விடுத்தால் அதற்கான அனு மதியை அரசு வழங்க தயா ராக உள்ளது என்று சுகாதா ரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்க ளாக ஆய்வு மேற்கொண் டார். இதனைத்தொடர்ந்து ஞாயிறன்று நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கொரோனா நோயாளி களுக்கு ஆயுர்வேத முறைப் படி சிகிச்சை அளிப்பதற்கு அதிகாரப்பூர்வமான கோரி க்கையை விடுத்தால் அதற் கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது.

கொரோ னாவுக்காக மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசு ரூ.6,000 கோடி அள வுக்கு நிதியினை செலவிட் டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக ளுக்காக மத்திய அரசிடம் தமிழக முதல்வர் ரூ.3,000 கோடி நிதி உதவி கோரி யுள்ளார். தமிழகத்தில் பிளா ஸ்மா சிகிச்சை படிப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்குவதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகத்தில் 2,000 ஆய் வக உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தொடர்ந்து மருத்துவமனை களில் 70 ஆயிரம் படுக்கை கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். அவர் கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.