குழித்துறை, ஜுன் 11- கடத்தலுக்கு பதுக்கிய 3 டன் ரேசன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வருவாய்த்துறை பறக்கும் படை தனி வட்டாட்சியர் கே.சி.பாபு ரமேஷ் தலைமையில் புதனன்று முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக டார்பாளால் மூடப்பட்ட இடத்தை சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூட்டைகளில் சுமார் 3,000 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அரிசியை கைப்பற்றி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். பதுக்கிய நபர் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.