சிதம்பரம், ஜூன் 17- கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே பக்கிங்காம் கால்வாயை சீரழிக்கும் வித மாக தனிநபர்கள் இறால் குட்டையின் கழிவுநீரை கால்வாயில் விடுகின்றனர். இதனால் பங்கிங்காம் கால் வாயில் உள்ள நீர் உப்புநீராக மாறியுள்ளது. நிலத்தடிநீர் உப்புநீராக மாறியதால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடையில் கால் வாயில் கிடக்கும் நீரை கால்நடைகள் குடிக்க முடியவில்லை. இந்த நிலையில், மேலும் மேலும் இறால் பண்ணை கழிவுகளை கால்வாயில் விடுவதால் துற்நாற்றம் வீசு கிறது. கால்வாயின் அருகே பொதுமக்கள் செல்லமுடிய வில்லை. அப்படியே சென்றா லும் மூக்கை பிடித்துக் கொண்டு தான் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சி.மானம்பாடி, பொன்னந்திட்டு, கிள்ளை என பாதிக்கப்பட்ட பத்துக் கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், பக்கிங்காம் கால்வாய் பாசன விவசாயிகள், திமுக தலைமை செயற்குழு உறுப் பினர் கிள்ளை ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு ஆகி யோர் தலைமையில் சிதம்ப ரம் சார் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். கற்ப னைச்செல்வம், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, சுனில்குமார், கிள்ளை நக ரச் செயலாளர் வினோபா, ஒன்றியக் குழு திருஞானம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்துகொண்டனர்.