சிதம்பரம், ஜூன் 22- கல்லணை கொள்ளிடம் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப் பட்டது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இதன் முழு கொள்ள ளவு 47.50 அடியாகும். ஏரி யில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப் படுகிறது. மேலும் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் 44 ஆயி ரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறு கின்றன. ஏரிக்கு நீர் வரத்து குறைந்துவிட்டாலும் சென் னைக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மேட்டூர் அணை கடந்த 12 ஆம் தேதி திறக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லணை கொள்ளிடத்தில் கடந்த 16 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 150 கன அடி வீதம் கீழ ணையை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை அதி காரிகள், வடவாற்றில் திறந்து விட்டு வீராணம் ஏரிக்கு அனுப்பி வருவதால் ஒரு வாரத்தில் ஏரி நிரம்பும் என்று கூறப்படுகிறது.