tamilnadu

img

அண்ணாமலை பல்கலை.யில் பன்னாட்டு தமிழ் கல்வெட்டு பயிற்சி

சிதம்பரம், அக். 1- சிதம்பரம் அண்ணாமலை பல்க லைக்கழகத்தில் 15ஆவது பன்னாட்டு  தமிழ் கல்வெட்டு பயிற்சிப் பட்டறை திங்களன்று (செப். 30) துவங்கியது. இந்த பயிற்சிப் பட்டறை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பாரிஸ் தேசிய அறிவியல் ஆய்வு  மையம், தமிழக அரசு தொல்லியல் துறை, அண்ணாமலை பல்கலைக் கழக மொழியியல் உயராய்வு மையம்,  திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்  கலைக்கழகம் ஆகியவை இணைந்து  இந்த பயிற்சி முகாமை நடத்துகிறது. துவக்க விழாவிற்கு அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந் தர் முருகேசன் தலைமை தாங்கினார்.  மொழியியல் முதல்வர் திருவள்ளு வன் வரவேற்றார். பாரிஸ் தேசிய அறி வியல் ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டுப் பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி முருகையன், தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநரும், கீழடி  அகழாய்வு மைய இயக்குநருமான சிவானந்தம், பல்கலைக்கழக மொழி யியல் புல இயக்குநர் சரண்யா, தஞ்சா வூர் தமிழ் பல்கலைக்கழக பேராசிரி யர் ராஜவேலு ஆகியார் கலந்து கொண்டு பேசினார்கள். பயிற்சி முகாமில் இந்தியா, கனடா,  அமெரிக்கா, பிரான்சு, இலங்கை  உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  இருந்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்  கள் கலந்து கொண்டனர்.  விழா ஏற்  பாடுகளை தமிழ்நாடு மத்திய  பல்கலைக்கழக பேராசிரியர்  வேல்முருகன், அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் புலத்தை சேர்ந்த குமரேசன், குப்பு சாமி ஆகியோர் செய்திருந்தனர்.