கடலூர், டிச. 2- என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கல்வித்துறையும், கடலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து விஞ்ஞா னியை சந்திப்போம் என்ற நிகழ்ச்சியை நெய்வேலி லிக்னைட் அரங்கத்தில் நடத்தின. இந்திய அரசின் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குந ரும் ராணுவ விஞ்ஞானியுமான வி. டில்லி பாபு அறிவியல் இல்ல மாணவர்களை சந்தித்து விமானவியலில் இந்தியாவின் மகத்தான சாதனைகளும் - மாணவர்களின் வருங்கால பங்களிப்பும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறு வனத்தின் சமூக பொறுப்புணர்வு துறையின் முதன்மை பொது மேலாளர் ஆர்.மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளைத் தலைவர் கே. தாம ரைச்செல்வி வரவேற்றார். மாவட்டச் செயலா ளர் ஆர். தாமோதரன், துணைத் தலைவர் எஸ்.பாலகுருநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நெய்வேலி கல்வித் துறையின் செயலாளர் எஸ். விநாயகமூர்த்தி, துணைப் பொது மேலாளர் ஏ. அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ராணுவ விஞ்ஞானி டெல்லி பாபு பேசுகை யில்,“இந்தியாவின் இலகுரக போர் விமா னங்களின் வடிவமைப்பு மற்றும் அதன் சாத னைகளையும் விமானங்கள் பறப்பதற்கு உத வும் அறிவியல் வழிமுறைகளையும் மாண வர்களைக் கொண்டே விளக்கிக் காட்டிய தோடு இதுபோன்ற புதுமையான சிந்தனை களுக்கும் சோதனைகளுக்கும் மாணவர்கள் தயாராக வேண்டும்” என்றார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் திற்கு மாணவர்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதால் மத்திய அரசு சிறப்பு ஊதி யத் தொகை திட்டத்தை வழங்கி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு நெய்வேலி என்எல்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜவகர் பள்ளிகள், சேக்ரட் ஹார்ட் பள்ளி, சிதம்பரம் நிர்மலா மெட்ரிகுலேஷன் பள்ளி, பண்ருட்டி ஜான்டூயி பள்ளி, ஸ்ரீமுஷ் ணம் தவ அமுதன் மெட்ரிக் பள்ளி காட்டு மன்னார்கோயில் கலைமகள் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 14 பள்ளிகளில் செயல்படும் 33 துளிர் இல்ல மாணவர்கள் பங்கு பெற்றனர். மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் ராணி துணைச் செயலாளர்கள் பிரசன்னகுமார், விஜயகுமார் செயற்குழு உறுப்பினர்கள் சசிகலா, பரமேஸ் வரி, பூர்வ சந்திரன், மோகன்,செல்வின் ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த னர். மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் பேபி மாலா இறுதியாக நன்றி கூறினார்.