கடலூர், ஜூலை 8- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கட லூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த னர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு உத்தரவின்படி ஜூலை 1 முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தொழில்நுட்ப பணி யாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். போக்குவரத்து வசதியற்ற நிலையில் பணியாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை உள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பணி புரிவதிலிருந்து விலக்களிப்பட வேண்டும் என அர சாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் பணிக்கு வர கட்டாயப்படுத்துவதோடு, நோயால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களையும் பணிக்கு வரு மாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது அரசா ணையை மீறிய செயலாகும். நிர்வாக அவசரத் தேவைக்கு தேவையான பணியாளர்களை வர வழைத்து பணிபுரிய வைப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், தேவையற்ற முறையில் போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் செயல்படுவதால் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கம் முற்றிலும் சீர்குலைக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே பேருந்துகள் இயக்கப்பட்ட போது 60 விழுக்காடு பயணிகளை ஏற்றுவது, கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வருவாய் கருதி நிர்வாகம் அனுமதிக்க வில்லை. இதனால்தான் நோய்த்தொற்று அதிகரித்து மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்படுவதற்கான சூழ் நிழல் உருவானது. எனவே, போக்குவரத்து நிர்வாகம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொமுச தலைவர் பி.பழனிவேல், சிஐடியு துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், எம்எல்எப் பொதுச்செயலா ளர் இரா.மணிமாறன், ஏஏஎல்எல்எப் பொதுச்செயலர் சீ.கருணாநிதி, ஐஎன்டியூசி பொதுச்செயலர் பி.சாமி நாதன் ஆகியோர் அந்த மனுவில் கையெழுத் திட்டுள்ளனர்.