கடலூர், பிப்.6- கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதபோதிலும் கடலூரிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 8 படுக்கை களுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 13 வட்டார அரசு தலைமை மருத்துவமனைகளிலும் தலா 4 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கடலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் பி.என்.ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.