சிதம்பரம், மே 6- கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ளதால் அண்ணா மலைப் பல்கலைக்கழ கத்தில் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகளை காணொளி மூலம் நடத்த துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன் உத்தரவிட்டுள்ளனர். பல்கலைக்கழக மானி யக்குழு மற்றும் தமிழக அர சின் உயர் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாண வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கால விர யத்தை தவிர்க்கும் பொருட்டு காணொளி மூலம் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் காணொளி வாய்மொழித் தேர்வு வருகிற ஜூன் 9ஆம் தேதி நூலகத்துறை ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ணகுமாருக்கு நடை பெற இருக்கிறது. இம்மாதத் தில் 12 வாய்மொழித் தேர்வு கள் நடத்த முன்மொழிவுகள் வந்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக் கழக கல்வி ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்க டேசலு செய்து வருகிறார். இதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கல்வியியல் துறையில் உள்ள நவீன வகுப்பறையில் செய்யப் பட்டுள்ளது.