கடந்த டிசம்பர் மாதத்தின், சில்லறை பணவீக்கம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்த மந்த நிலையில் உள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி சரிவு, வேலையின்மை அதிகரிப்பு, மக்களின் வாங்கும் திறம் சரிவு போன்ற பிரச்சனைகள் காணப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் சில்லறை பணவீக்கம் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். வெங்காயம், உருளை கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. மொத்த பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே போல், டிசம்பர் மாதத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 14.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த 2018-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் -2.65 சதவீதமாக இருந்தது. 2019-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 10.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 2016-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த பணவீக்க அளவான 2-6 சதவீத இலக்கை முதல் முறையாகச் சில்லறை பணவீக்க அளவீடு தாண்டியுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அளவை தாண்டியுள்ளது பொருளாதார வளர்ச்சிக்குச் சுமையாக உள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கையை மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.