tamilnadu

img

சிறுத்தை தோல் கடத்தல் - ஒருவர் கைது 

ஒடிசா மாநிலத்தில் சிறுத்தை தோல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பரமுண்டாவின் கலிமந்திர் பகுதியில் எஸ்.டி.எப் அதிரடிப்படையினர் சோதனை நடத்தி வந்துள்ளனர். இந்த சோதனையில் பிரசாந்த் குமார் நாயக் என்பவர் சிறுத்தை தோலை கடத்தி வந்ததை கண்டறிந்துள்ளனர். உடனே அதனை பறிமுதல் செய்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது குறித்து அதிரடிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே, அப்பகுதியில் சில வன விலங்குகளின் தோல் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில், மீண்டும் வன விலங்குகளின் தோல் கடத்தல் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.