tamilnadu

வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்பது எப்போது?

மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 19- வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமி ழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்தும், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறி விக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமா னங்களை இயக்குவதற்கான நடைமுறை களை மத்திய அரசு கடந்த 5 ஆம் தேதி அறி வித்தது. அதனடிப்படையில் வெளிநாடு களில் சிக்கித் தவித்த 60 ஆயிரத்து 942 இந்தி யர்கள் நாடு திரும்பினர்.

மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து  பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து திமுக  சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்  டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளியன்று (ஜூன் 19)  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் 40 ஆயிரத்து 433 தமிழர்கள் ஊர்  திரும்ப விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்க ளில் 14 ஆயிரத்து 65 தமிழர்கள் சொந்த ஊர்  திரும்பியுள்ளதாகவும், 26 ஆயிரத்து 368  விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழர்களை மீட்டு வர எத்தனை விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறித்தும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட நிதி உதவி, உணவு மற்றும் வசதி கள் குறித்து மத்திய அரசு தனது அறிக்கை யில் எதையும் குறிப்பிடவில்லை என திமுக  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரி வித்தார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம் என்றும் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதி பதிகள், உயர் நீதிமன்றம் ஜூன் 12 ஆம் தேதி  பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், சொந்த ஊர் திரும்ப விண்ணப்  பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்தும், ‘வந்தே  பாரத்’ திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தர விட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 23 ஆம்  தேதிக்குத் தள்ளிவைத்தனர்.