தமுஎகச கலை இலக்கிய விருது களின் ஒரு பரிசாக தோழர் கே.முத்தையா நினைவாக வழங்கப்படும் தொன்மம்சார் இலக்கிய விருதினை ‘காலனி ஆட்சியின் நல வாழ்வும் நம் வாழ்வும்’ நூல் பெற்றி ருக்கிறது. இந்நூலுக்குக் கருத்துரை வழங்கியுள்ள முனைவர் பக்தவத்சல பாரதி, காலனியம் ஏன் கற்க வேண்டும் என கேள்வியெழுப்பி நம் மரபுகளை யும் மாண்புகளையும் மீட்டெடுக்கக் காலனியம் கற்க வேண்டும் என்கிறார். அந்த வகையில் இந்நூல் இந்திய நிலப்பரப்பிற்குள் காலனிய காலத்தில் அலோபதி மருத்துவ முறை உட்புகுந்து உண்டாக்கிய அதிர்வுகளை பட்டியலிடு கிறது.
1490 களில் போர்த்துகீசியர்கள் தங்களது ராணுவத்தினருக்காக கோவாவில் அறிமுகம் செய்யதது முதல் கிழக்கிந்திய கம்பெனி தனது ராணுத்தினருக்காக 1664ல் சென்னை யில் வாடகை வீட்டில் தொடங்கியது, இடையிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி ஜெயலலிதா ஆகியோரின் காலம் வரையிலும் ஏறக்குறைய 600 ஆண்டுகால அலோபதி மற்றும் இந்திய மருத்துவ வரலாற்றை இந்நூல் பேசுகிறது. அதனூடாக மருத்துவம், மருத்துவக் கல்வி, சுகாதாரம், துப்புரவு ஆகிய வற்றையும் அது சமூக விஞ்ஞான அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்க ளில் நிகழ்த்திய தாக்கங்களையும் விளக்குகிறது. கி.மு 3, 4 ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்கத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் அலோபதி மருத்துவக் கண்டு பிடிப்புகள் வளரத் தொடங்கும் போது மருத்துவ முறைகள் கடவுளுக்கு எதிரானதென்ற திருச்சபைகளின் பெரும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. நோய் குணமாவதை நிரூபிக்க தவறும்பட்சத்தில் மரணதண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கிழக்கிந்திய கம்பெனி தங்களின் தேவைக்களுக்காக அலோபதி மருத்துவத்தையும் கொண்டு வந்தாலும் படிப்படியாக இந்திய மக்களிடையேயும் கொண்டு சென்றது. ஆனால் மக்கள் ஆரம்பத்தில் எதிர்க்கவே செய்தனர் குறிப்பாக அம்மை, காலரா போன்ற நோய்கள் தெய்வ குற்றங்களால்தான் வருகின்றன என நம்பினர். அறியாமையிலும் மூட நம்பிக்கையிலுமாக இருந்த மக்கள் ஒருபுறமும் தங்களின் சுதேசி மருத்து வங்களான ஆயுர்வேதம் யுனானி சித்தவைத்தியம் ஆகியவற்றிலிருந்து வெளிவர மறுத்தவர்கள் மறுபுறமாக வும் இருந்தனர். இதே நிலைதான் மருத்துவக் கல்விக்கும். பிராமண மாணவர்கள் பிணத்தைத் தொடுவது தங்களது மத நம்பிக்கைக்கு விரோதமானது எனக் கருதினர். எனவே அவர்கள் மருத்துவம் பயில பிணத்தைத் தொட்டு அறுக்கும் பயிற்சி பெறுவதிலி ருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 1836 ல் கல்கத்தா வில்லியம் கோட்டையில் 50 முறை பீரங்கிகள் முழங்க பிராமண மாணவர்கள் பிணத்தைத் தொட்டு அறுவை பெறும் பயிற்சிகாகான முதல் நிகழ்வு அரங்கேறியது. தொடக்கத்தில் மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் புறக்கணித்த பிராமணர் மற்றும் உயர் சாதியினர் பின்நாட்களில் 99 விழுக்காடு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர். அதே காலத்தில் இஸ்லாமிய மாணவர்கள் 99 விழுக்காடு ராணுவக் கல்வியை தேர்வு செய்தனர்.
அலோபதி மருத்துவத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத் தொடங்குகையில் நாடு தமக்கான சகலவிதமான ஏற்றத்தாழ்வுகளோடும் தான் உள்வாங்கிக் கொண்டு பரிண மித்தது. இந்திய சாதியப் படிநிலைக ளில் எவ்விதமான மாற்றங்களும் நிகழ்ந்து விடாமல் சனாதனவாதிகள் பார்த்துக் கொண்டதையும் நூலாசிரி யர் பதிவாக்கியுள்ளார். ஆரம்ப காலங்களில் அலோபதி மருத்துவக் கல்வியை சமஸ்கிருதம், உருது, மராத்தி, குஜராத்தி, வங்காளி, ஒரியா, இந்தி ஆகிய மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும் தென்னிந்தியா வில் ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்பதற்கான ஆரம்பநிலை வகுப்பு களும் நடத்தப்பட்டன. அலோபதி மருத்துவக் கல்வி தீவிரமாக வளர்ந்து வருகையில் சுதேசி மருத்துவங்களாயிருந்த ஆயுர்வேதம், யுனானி, சித்தவைத்திய முறைகள் யாவும் பாராமுகமாகிப் போயின. எனினும் இம்மருத்துவ முறை களுக்கான பல்லாயிரம் ஆண்டுகால உயிரோட்டமான வரலாற்றுத் தொடர்புகளை - அதற்கான அடிப்படை ஆவணங்களாக புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், சங்க இலக்கியங்கள், சமண, பௌத்த இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் ஆகியவற்றி லிருக்கும் குறிப்புகள் வரிசைப்படு த்தப்பட்டுள்ளன. சென்னை மட்டுமின்றி பம்பாய், கல்கத்தா என தேசமெங்கும் நிகழ்ந்த மருத்துவ வரலாற்றோடு சமூக வரலாற்றையும் இனைத்துப் பெரும் காலனிய கால வரலாற்றுக் கருகூலமாய் நூலினை உருவாக்கித் தந்திருக்கும் டாக்டர் சு. நரேந்திரன் அவர்களுக்கு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவம் செய்திருக்கிறது. தமுஎகச வும் தொன்மம்சார் நூலுக்கான விருது வழங்கி அவரின் பேருழைப்பிற்கு மகுடம் சூட்டி மகிழ்கிறது.
‘ஊக்க ஊசி போட்டிருக்கிறீர்கள்’
திருவாரூரில் நடைபெற்ற விழாவில் தொன்மம் சார் நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கிய மருத்துவர் சுரேந்திரன், “டாக்டராக நான் பலருக்கு ஊசி போட்டிருக்கிறேன். இந்தப் பரிசின் மூலம் மேலும் நூல்கள் எழுத நீங்கள் (தமுஎகச) எனக்கு ஊசி போட்டிருக்கிறீர்கள்” என்றார். “தமிழ்வழி மருத்துவக் கல்வி வளர வேண்டும் என்பது எனது விருப்பம். இதற்குத் தடையாக இருப்பதும் இருப்பவர்களும் யார் என்ற கேள்வியோடு தமிழில் மருத்துவ நூல்கள் எழுதினேன்” தனது ஊக்கத்திற்கு அடித்தளம் எது என்பதையும் அவர் கம்பீரமாக எடுத்துரைத்தார் “ஆங்கிலத்தில் இருக்கும் மருத்துவ விஷயங்களைத் தமிழுக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் எனது சகோதரர். 1970களில் அவர் செய்தித் துறையில் வேலை பார்த்தார். அப்போது இருதயம் சம்பந்தப்பட்ட கருவிபற்றி மொழிபெயர்த்து தரச் சொன்னார். நானும் அதை ஏற்று செய்து தந்தேன். அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அந்த மகிழ்ச்சிதான் மருத்துவ நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது” என்றும் கூறினார் . விதைகள் எங்கே விழும் எப்படி முளைத்து வேர்விட்டுப் பெரும் மரமாகும் என்பதை அறிய இயலாது என்பது அவரின் பேச்சில் தெரிந்தது.