tamilnadu

img

ஊதியம் பெற முடியாமல் அவதிப்படும் சிறப்பு பயிற்றுனர்கள்

அரசு ஊதியம் கொடுத்தும் பெற  முடியாமல் தவிக்கும் 3000  சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இதர பணி யாளர்களுக்கும் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்க ளுக்கான சிறப்பு பயிற்றுநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.சேதுராமன் வெளியிட்டி ருக்கும் அறிக்கை வருமாறு:-

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு  வரை பயிலும் 2 லட்சம் மாற்றுத் திறன்  மாணவர்களுக்கு  (பார்வை ,செவித்தி றன் குறைபாடு , கை-கால் இயக்க குறைபாடு, ஆட்டிசம் , மூளை முடக்கு  வாதம், மனவளர்ச்சி, கற்றல் குறை பாடு, அதீத செயல்பாடு கொண்ட வர்கள் என 21 வகையான மாற்றுத்  திறன் மாணவர்களுக்கு)  சிறப்பு கல்வி, பயிற்சிகள் மற்றும் அரசு  நலத்திட்ட உதவிகளை ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி  உள்ளடங்கிய  கல்விக் கூறு வழியாக பெற்றுத்தரு கின்றோம். சிறப்பு பயிற்றுநர்களை மாற்றுத்தி றன் மாணவர்களுக்கு கல்வி போதிக்க  வேண்டும் என்ற நோக்கில்  தொகுப்பூதி யத்தில் 1998 முதல் 2002 வரை மாவட்ட  தொடக்க கல்வி திட்டம் ஏழு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். பின்னர் 2002 முதல் 2012  வரை அனை வருக்கும் கல்வி இயக்கம்  வாயிலாக தொண்டு நிருவனங்களின் மூலமாக பணிபுரிந்து வந்தனர்.

தற்போது 2018  முதல் ஒருங்கி ணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணி புரிகின்றனர். 2012 ஜூன் மாதம் தொண்டு நிறுவனங்களை அடியோடு ரத்து செய்து விட்டு மாற்றுத்திறன் மாணவர்கள் உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசுப் பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர் களை வட்டார வள மையங்களில் (பி.ஆர்.சி) பணியமர்த்தியது. 2015 ஆண்டு ஜூன் மாதம் மாற்றுத்தி றன் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்று  நர்கள் பணி மாறுதல் செய்யப்பட்ட னர். தற்போது மதிப்பூதியமாக ரூ. 16  ஆயிரம் வழங்கப்படு கிறது. இதில் தற்காலிக பணியாளர்க ளுக்கு கிடைக்கும் எவ்வித அரசின் சலுகைகளும் இல்லாது தினக்கூலி பணியாளர்க ளாய் மாற்றுத் திறன் குழந்தைகளுக்காக தொடர்ந்து 20  ஆண்டுகளாக கொத்தடிமை பணியா ளர்களைப்போல் பணியாற்றி வரு கின்றோம்.

2015 இக்காலத்தில் தான் நேரடி யாக மாவட்ட திட்ட அலுவலகத்தி லிருந்து சிறப்பு பயிற்றுநர்களின் வங்கி  கணக்குக்கு வந்த ஊதியம், அங்கி ருந்து எங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பும் நடைமுறையை பகுதிநேர  ஆசிரியர்கள் போன்று சிறப்பு பயிற்று நர் ளுக்கும் சம்பளம் வழங்கப் பட்டு வருகிறது. இதனைக்கருத்தில் கொண்டு கடந்த மாதம் 27ஆம் தேதி  ஊரடங்கு  உத்தரவு இருக்கின்ற இச்சூழ்நிலை யில் சிறப்பு பயிற்றுநர்களின் நேரடி வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த வேண்டும் என தனிப் பிரிவு முதல் அனைத்து கல்வித்துறை உயர் அலு வலர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக  கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

ஆனாலும் எங்கள் உயர் அலுவ லர்கள் இதுபோன்ற அசாதரண சூழ்நிலையிலும் பள்ளிகளுக்கு  எங்கள் ஊதியத்தை விடுவித்து ஊதிய  பெறமுடியாத சூழ்நிலையை உரு வாக்கியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கின் றது. அதன்பின்பு, இம் மாதம் மூன்றாம் தேதி  எங்களுக்கு ஊதிய கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி மீண்டும் மின்னஞ்சல் வழி யாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. சில மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்களை பகுதிநேர ஆசிரி யர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுநர்க ளுக்கு ஊதியம் வழங்க கேட்டுக் கொண்டாலும் அசாதரண சூழ்நிலை யில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியாளர்களின் வங்கி கணக்குக்கு ஊதியம் விடுவிக்க சிக்கல் எழுந்துள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் உண வுக்கும் அடிப்படை செலவினத்துக் கும் கூட சம்பளம் பள்ளி  வங்கிக் கணக்கில் அரசு வழங்கியும் ஊதி யத்தினை பெறமுடியாமல் தவித்து வருகின்றோம். ஆகவே, இந்த அசாதாரணமான காலத்தில் திறன்பட கையாண்டுவரும் தமிழக முதல்வர்  தலையிட்டு  இம்மாத ஊதியம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். எதிர்காலத் தில் வட்டார வள மையம் மூலமாக  நேரிடையாக சிறப்பு பயிற்றுநர்க ளின் வங்கிகணக்கில் ஊதியம் கிடைத்தி டவும், எங்களை கருணையின் அடிப்ப டையில் 20 ஆண்டு கால சேவையை  கருத்தில் கொண்டு பணி நிரந்தரம்  செய்யுமாறு தமிழ்நாடு ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாற்றுத்  திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் சங்கம் சார்பில் பணிந்து வேண்டுகின்றேன். இவ்வாறு சேதுராமன் தெரி வித்துள்ளார்.