மதுரை, ஜூன், 13 - சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற 5 - ஆம் கட்ட அகழாய்வுப் பணி யை வியாழன் அன்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார் .இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கீழடியை மத்திய அரசு கைவிட்டுச் சென்றதற்கு காரணம் தெரிய வில்லை, மத்திய தொல்லியல்துறை திரும்பவும் கீழடி அகழாய் வை மேற்கொள்ள வேண்டும். சங்க கால இருப்பிடத்தி ற்கான பகுதி இந்த 110 ஏக்கர் மட்டும் அல்ல. கீழடியைச் சுற்றி உள்ள கொந்தகை, அல்லிநகரம் உள்ளிட்ட ஆறு கிராமங்க ளில்ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சங்கக் கால அடை யாளங்கள் இருக்கின்றன. புவிக் காந்த விசையில் பூமிக்கடியில் கட்டமைப்புகள் உள்ளதா? என அறிய முடியும் என்று அமைச்சர் சொல்லி உள்ளார். கண்ணால் கண்டே கட்டமைப்பு பூமிக்கடியில் இருப்பதை உணர முடியும். 5 - ஆம் கட்ட அகழாய்விற்கு 47 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு என்பது யானை பசிக்கு சோளப் பொரி, 15 சிறிய குழிகள் தோண்டுவ தாகச் சொல்கிறார்கள். ஆனால் மத்திய தொல்லி யல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் ஒவ்வொரு முறையும் 50 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. அதற்கான வசதிகள் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ளது. எனவே மத்திய தொல்லியல் துறை கீழடி அகழாய் வை மேற் கொள்ள வேண்டும். கீழடி அகழாய்வுக்கு இடம் கொடுத்துள்ள பேராசிரியர் முருகேன் அவர்களை பாராட்ட வேண்டும். அவருடைய இடத்தில் இருந்து துவங்க வேண்டு என்று என்னுடைய முதல் கட்டுரையில் குறிப்பிட்டு ள்ளேன் என்று கூறினார். பின்னர் கீழடி அகழ்வாய்வு பொருட்கள் வைப்பதற்கான அருங்கட்சியகம் அமையவுள்ள இடத்தை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொல்லியல்துறை அதிகாரி களுடன் பார்வையிட்டார்.