tamilnadu

நாமக்கல் மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

கோபிநாதம்பட்டியில் வங்கி கிளைகள் தொடங்க கோரிக்கை 

தருமபுரி, பிப். 5- அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டு சாலை பகுதி யில் புதிய வங்கி கிளைகள் தொடங்க வேண்டும் என அப்ப குதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கோபிநா தம்பட்டி கூட்டுசாலையானது, அரூா்-சேலம் தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது. இந்த கூட்டுசாலைக்கு தென்க ரைக்கோட்டை, சின்னாங்குப்பம், பறையப்பட்டி புதூா், கோபாலபுரம், ஜம்மனஹள்ளி, பேதாதம்பட்டி, டி.புதூா், கூக்கடப்பட்டி, நம்பிப்பட்டி, எச்.கோபிநாதம்பட்டி, எருமி யாம்பட்டி, கொக்கராப்பட்டி, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்துச் செல்கின் றனா்.  இதேபோல், சித்தேரி மலைத் தொடரில் உள்ள அரசநத் தம், கலசப்பாடி, வாச்சாத்தி ஆகிய பகுதியிலுள்ள மலை வாழ் பழங்குடியின மக்களும் கோபிநாதம்பட்டி கூட்டுச்சா லைக்கு வந்துச் செல்லும் நிலையுள்ளது. இந்தப் பகுதியில் விவசாயிகள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா்கள், மகளிர் சுய உதவிக் குழுவினா், வணிகா்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் போ் வசிக் கின்றனா்.  மேலும், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை பகுதியில் அர சுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறு வனங்கள், கூட்டுறவு சா்க்கரை ஆலை, புழுதியூா் புதன் சந்தை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கமிஷன் மண்டி கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் உள்ளன. இந் நிலையில், கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை மட்டுமே உள்ளது. இதனால், கல்விக் கடன்கள், விவசாய பயிர் கடன்கள், நகைக் கடன்கள், வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கு தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பொது மக்கள் பல்வேறு சிரமங்களை அடையும் நிலையுள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அரூா் மற்றும் பாப்பி ெரட்டிப்பட்டியில் உள்ள வங்கிகளுக்கு செல்லும் நிலை யுள்ளது. எனவே, கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில், கூடு தலாக தேசியமயமாக்கப்பட்ட புதிய வங்கிக் கிளைகளை தொடங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட  நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் கோழி நோய் தடுப்பூசி முகாம்

நாமக்கல், பிப். 5- நாமக்கல்லில் கோழி மூலம் பரவும் நோய்க்கு தடுப்பூசி பணியானது பிப்.9ஆம் தே முதல் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் பிப். 9ஆம் தே முதல் கோழி நோய் தடுப்பூசி வழங்கும் பணியானது தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, தமி ழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதா ரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்துவருகிறது. கோழி வளர்பபு மூலம் தங்களது குடும்பத்திற்கான முட்டை மற்றும் இறைச்சி தேவைகளையும் அடைவதோடு விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர். கோழி வளர்ப்பு ஊரகப்பகுதிகளில் உபயோகமற்ற தானிய பகுதிக ளிலும், நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வாரந்தோறும் சனியன்று கால் நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத் தில் கோழி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. நடப் பாண்டில் பிப். 9ஆம் தேதி முதல் பிப். 22ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி பணி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தங்களது பகுதியின் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் கலந்து  கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவு- மாணவர்கள் தவிப்பு

இளம்பிள்ளை, பிப். 5- வைகுந்தம் பகுதியில் நிலக்கடலை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி வகுப்பு நடைபெற் றது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், வைகுந்தம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு நடைபெற்றது. இப்பண் ணைப்பள்ளிக்கு  மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக் குநர் மணிமேகலாதேவி  தலைமை வகித்து பண்ணைப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். இப்ப யிற்சியில் ஓய்வுபெற்ற வேளாண்மை வளர்ச்சி அலுவ லர் சுப்ரமணியம்  கலந்துகொண்டு நிலக்கடலையில்   விதைப்பு முதல் அறுவடை வரை கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்  குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். மேலும், நிலக்கடலையில் நன்மை செய்யும் பூச்சிகளையும், தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையும் இனம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த  வேண்டும் என்றார்.  மேலும், வைகுந்தம் உதவி வேளாண்மை அலுவலர் தங்க வேல்  உழவன் செயலி பற்றியும் அதன் உபயோகம் குறித் தும் பேசினார். இதில், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார், வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் செங்கோடன் மற்றும் அட்மா திட்ட அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிலக்கடலை ஒருங்கிணைந்த  பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி

இளம்பிள்ளை, பிப். 5- சேலம் மாவட்டம் மகு டஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள கே.கே.நகர், ராசிக வுண்டனூர், சின்ன மாரியம் மன் கோயில்,மெய்யனூர், பனங்காடு, கோனேரிப் பட்டி உள்ளிட்ட அரசு பள்ளி களில் மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகின்ற னர். ஆனால், இப்பள்ளிக ளில் ஆசிரியர்கள் குறை வாக இருப்பதாலும், தற்சம யம்  தேர்வு நடைபெற வுள்ள நிலையில் மாணவர்க ளுக்கு பாடம் கற்பிப்பதில் ஆசிரியர்கள் சிரமத்திற்குள் ளாகி  வருகின்றனர். அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தி வருகிறோம் என கூறிக் கொண்டு மாணவர்களை அதிக அளவில் சேர்த்து வரு கின்றனர். ஆனால், போதிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும், பள்ளிகளில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு உடனடியாக ஆசிரி யர்களை தேர்வு செய்யப்பட வேண்டும் என பெற்றோர் கள் வலியுறுத்தியுள்ளனர்.