காஞ்சிபுரம், நவ. 20- விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற் கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இந்த நிலையில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காஞ்சிபுரம், திரு வள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, செங்கல்பட்டு ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணை யர் பழனிசாமிஆலோசனை நடத்தினார்.