புதுதில்லி, ஜூலை 23- கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு மத்திய அரசு இதுவரை என்ன ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடே சன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொ டர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, சு. வெங்கடேசன், தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிப்பு க்கு உள்ளானவர்களுக்கு மத்திய அரசு அளித்திட்ட நிவாரணம் மற்றும் புனர் நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக் கைகள் என்ன என்று கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் மத்திய உள்துறை விவகாரங்கள் இணை அமைச் சர் நித்தியானந்த் ராய் கூறியதாவது: நாட்டில் பேரிடர் ஏற்படும்போது அவற்றை மேலாண்மை செய்வதில் பிரதான பொறுப்பு மாநில அரசுகளுக் கே உண்டு என்ற போதிலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங் கும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு, நிலைமைகளைச் சமாளிப்பதற்காக, பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களு க்குத் தேவையான நிதி உதவி மற்றும் தேவையான உதவிகளைச் செய்திடும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் புயல் உட்பட பேரிடரால் ஏற்படும் பாதிப்பு களை மதிப்பீடு செய்து, தன்னுடைய மாநிலப் பேரிடர் துயர்தணிப்பு நிதி யத்திலிருந்து (SDRF-State Disaster Response Fund), நிதி உதவி மற்றும் நிவாரண வேலைகளைச் செய்திட வேண்டும். கூடுதல் நிதி உதவி, மத்திய அரசின் கீழ் உள்ள தேசியப் பேரிடர் துயர்தணிப்பு நிதியத்திலிருந்து (NDRF-National Disaster Respon se Fund), மத்திய உள்துறை அமைச்ச கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நடை முறைகளின்கீழ், அளிக்கப்படும். இவ்வாறு அளிக்கப்படும் உதவி என்பது “உடனடி நிவாரணம்” என்ற அளவில்தான் இருக்குமேயொழிய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு என்கிற அடிப்படையில் இருக்காது. பாதிப்புக்கு உள்ளான இடங்க ளில் புனர்நிர்மாணப் பணிகள் மேற் ்கொள்வதை சம்பந்தப்பட்ட மாநில அரசு கள்தான் மேற்கொள்ள வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நிவாரணம் அளிப்பது தொடர் பாக, மத்திய அரசாங்கம் மொத்தத் த்தில் 2,177.93 கோடி ரூபாய் 2018-19ஆம் ஆண்டிற்காக தமிழ்நாட்டிற்கு அளித்தி ருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மீன்துறை சார்பில் 3.88 கோடி ரூபாய் உதவி
மேலும், சு.வெங்கடேசன் கஜா புயலில் பாதிப்புக்கு உள்ளான பால் பண்ணை விவசாயிகள், மீனவர்க ளுக்கு மத்திய அரசு அளித்திட்ட உதவிகள் என்ன என்று கேட்டிருந்த கேள்விக்கு, எழுத்து மூலம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணைத் தொழில்களுக்கான இணை அமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் கல்யாண், கஜா புயலால் பாதிப்புக்கு உள்ளான மீனவர்களைப் பொறுத்தவரையிலும், மத்திய அர சாங்கம், மீன்வளத் துறை சார்பாக, தமிழ்நாடு அரசாங்கத்திற்கு 3 கோ டியே 88 லட்சம் ரூபாய் அளிப்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறியுள்ளார். ந.நி.