tamilnadu

img

சிறுவன் மீட்புப் பணியில் அரசு மெத்தனம்: மு.க.ஸ்டாலின்

சென்னை, அக். 29- சிறுவன் சுஜித் வில்சனின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ள இடத்தில் மரி யாதை செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிறுவனின் குடும் பத்தினருக்கு 10 லட்ச ரூபாய்  நிதியுதவியும் வழங்கினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய ஸ்டாலின், மீட்புப் பணியில் அரசு மெத்த னப் போக்குடன் செயல்பட்ட தாக குற்றம்சாட்டினார். மேலும் அமைச்சர்களும், சில  அதிகாரிகளும் பேட்டி அளிப்  பதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்ட வில்லையோ என்கிற ஏக்கம்  அனைவருக்கும் இருப்பதாக வும், சம்பவம் நடந்த உட னேயே மத்திய பேரிடர் மீட்புப்  படை மற்றும் ராணுவத்தி னரை அழைத்திருக்க வேண்  டும் என்றும் கூறினார்.

முதல்வர் இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுவன் சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து விட்டான் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளித்தது என்றும் அந்த செய்தியறிந்தவுடன் உயிரு டன் மீட்பதற்கு தேவையான  அனைத்து நடவடிக்கை களையும் உடனடியாக எடுக்குமாறு, அமைச்சர்கள்  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், திருச்சி  மாவட்ட ஆட்சியர் ஆகியோ ருக்கு உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.  இந்த துயரச் சம்ப வத்தில் உயிரிழந்த சிறுவன்  சுஜித் வில்சனின் பெற்றோ ருக்கும், உறவினர்க ளுக்கும் தனது ஆழ்ந்த இரங்  கலையும், அனுதாபத்தை யும் தெரிவித்துக் கொள்வ தாக தமது இரங்கல் செய்தி யில் முதலமைச்சர் கூறி யுள்ளார்.

ராகுல் காந்தி

குழந்தை சுஜித்தின் மறைவுக்கு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சுஜித்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் தனது  இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.

இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்  செயலாளர் இரா.முத்தர சன், “சிறுவன் சுஜித் வில்  சனை உயிரோடு மீட்க  எல்லாவிதமான முயற்சி களும் அரசு தரப்பில் மேற் கொள்ளப்பட்டன. ஒட்டு மொத்த தமிழகமும் ஏன் மனி தாபிமான உலகம் முழுவதும்  சுஜித் வில்சன் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டது” என்று கூறியுள்ளார்.

தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் தொல்.திரு மாவளவன் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், சிறு வன் சுஜித் மறைவுக்கு செம் மாந்த வீரவணக்கத்தைச் செலுத்தியிருக்கிறார். சிறுவ னின் பெற்றோருக்கு ரூ. 1  கோடி இழப்பீடும் ஒருவ ருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை யில், சிறுவனின் குடும்பத் திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழகத்தில் திறந்த நிலை யில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளை போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை நிரந்தரமாக மூடுவ தற்கு அல்லது மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்  டும் என வலியுறுத்தியுள்ளார்.