tamilnadu

img

15 மாநகராட்சிகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை: அமைச்சர் தகவல்

சென்னை, மார்ச் 11- சுற்றுச் சூழல் துறை மானியக்  கோரிக்கை மீது நடந்த விவாதங்க ளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்  சர் கே.சி.கருப்பண்ணன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:  மாநிலத்தின் சுற்றுச்சூழலை மேம் படுத்த ஒரு செயல் திட்டத்தை உரு வாக்குவதற்கு ஏதுவாக, 15 மாநகராட்சி களிலும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை புகழ் பெற்ற அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாக தயாரிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. மாநகராட்சிக்கு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் செலவில் மொத்தம் ரூ.120  லட்சம் செலவில் மூன்று ஆண்டு களுக்கு செயல்படுத்தப்படும். அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள பருவநிலை ஸ்டுடியோவுடன் இணைந்து, வேளாண் மண்டலம் வாரி யாக, கால நிலை மீள் வளர்ச்சி திட் டத்தை ரூ.332.82 லட்சம் மதிப்பீட்டில் 37 மாவட் டங்களில் தயாரிக்கப்படும். இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள  சின்ன ஏரியை 2020-21 ஆம் ஆண்டில்  சூழல்  மீள் கொணர்வுப் பணிகள் மேற் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரூ.336 லட்சத்தில் ஏரிக் கரையை வலுப்  படுத்தியும், தோட்டங்கள் போன்றவை அமைத்தும் புனரமைக்கப்படும். தோல் தொழிற்சாலைகள் அதிக மாக உள்ள திருப்பத்தூர், வேலூர்  மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்க ளின் வழியாக செல்லும் பாலாற்றின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேலூரை தலைமையிட மாகக் கொண்டு ஒரு  பறக்கும் படை ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.