தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சராசரியாக 5,000 முதல் 6,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது . ஆகஸ்ட் 17ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2,83,937 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,886 பேர் சிகிச்சை பலனின்றி தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இத்தொற்று முதியவர்கள் மற்றும் வேறு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கே அதிக பாதிப்புகளை ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு இத்தொற்றால் பெரும்பாலும் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் .அதில் 8,701 ஆண் குழந்தைகள், 7,908 பெண் குழந்தைகள் என மொத்தம் இதுவரை 16,609 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளளது.
மாதவாரியாக பார்த்தால்,
ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் 142 குழந்தைகளும்,
மே மாதத்தில் 1,144 குழந்தைகளும்,
ஜுன் மாதத்தில் 3,151 குழந்தைகளும்
பாதிப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஜுலை மாதத்தில் அதிகபட்சமாக 7,826 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தற்போது வரை 4,346 குழந்தைகள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.