தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 70 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தனியார் மருத்துவமனையில் 29 பேர், அரசு மருத்துவமனையில் 41 பேர் என 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 85,997 மாதிரிகளும், 84,163 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 72,67,122 மாதிரிகளும், 70,50,820 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.