tamilnadu

img

கொரோனா தாக்கம் எதிரொலி

31ஆம் தேதியோடு சட்டமன்றம் நிறைவு!

சென்னை,மார்ச் 21- தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யின் ஒரு பகுதியாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இம் மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா  வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால், பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அதிகமாக கூடும்  இடங்களில் பரவுவதால் தலைமை செயலகத்துக்கு பணியாளர்கள்,  பத்திரிகையாளர்கள் தவிர பொது மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சட்டமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து  கோரிக்கை விடுத்தன. ஆனால், சட்டமன்ற கூட்டத் தொடர் தொடர்ந்து  நடைபெற்றால்தான் மக்கள் அச்ச உணர்வின்றி இருப்பார்கள் என்றும், மக்களுக்கு தகவல்கள் சென்றடையும் என்றும் முதல மைச்சர் விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வெள்ளியன்று(மார்ச் 20) அலுவல் ஆய்வு  கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத தால்  சனிக்கிழமையன்று(மார்ச் 22) நண்பகல் 12 மணிக்கு அலுவல் ஆய்வுகுழு மீண்டும்  கூடியது. இது தொடர்பான அறிவிப்பை பேர வைத் தலைவர் ப. தனபால் வெளியிட்டார்.

அந்த கூட்டத்தில் வரும் திங்கள் முதல் காலை - மாலை என இரு  பிரிவுகளாக பேரவை நடக்கும் என்றும், காலை 10 மணிக்கும் மாலை  5 மணிக்கும் பேரவை கூடும் என்று முடிவு செய்யப்பட்டது. வரும் திங்களன்று (மார்ச் 23) ஆம் தேதி காலை இறுதி துணை நிதி நிலை அறிக்கை, முன்பான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து கைத்தறி,துணி நூல் துறை, செய்தி, விளம்பரம்துறை, எழுத்து பொருள் மற்றும் அச்சு  துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதமும் அமைச்சர்க ளின் பதிலுரையும் இடம்பெறும். செவ்வாய்க்கிழமை  (மார்ச் 24) காலை தொழில் துறை, சிறு- குறுந்த தொழில்கள் துறை, மாலையில் வணிக வரி, பத்திரப்ப திவு மற்றும் பால்வளத்துறை ஆகிய  மானிய கோரிக்கைகள். புதன்கிழமை (மார்ச் 25) தெலுங்கு வருட பிறப்பு அரசு விடு முறை. அதனைத் தொடர்ந்து 31 ஆம் தேதி வரை பேரவை நடக்கும் என்றும் பேரவைத் தலைவர் அறிவித்தார்.