குழித்துறை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் தோழர்.செல்லசாமி & வில்சி இல்லத்திருமண விழா எளிய முறையில் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், முன்னாள் குழித்துறை நகர் மன்ற தலைவர் டெல்பின், மார்த்தாண்டம் வட்டாரக் குழு செயலாளர் அனந்தசேகர், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சகாதேவன், மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மார்த்தாண்டம் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமகள் அஞ்சு, மணமகன் சோமு ஆகியோரை வாழ்த்தினர். கொரோனா கட்டுபாடுகளுடன் எளிய முறையில் நடைபெற்ற இத்திருமண விழாவில் 15 ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவியும் மேலும் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் நிதியும் வழங்கப்பட்டது.