tamilnadu

சாராயம் காய்ச்சியவர்கள் கைது

அவிநாசி, மே 14 - சேவூர் அருகே சாரா யம் காய்ச்சிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சேவூர் அருகே சாரா யம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட னர். இதில் சேவூர் அருகே மொண்டிபாளையம் பகுதியில் இரு இடங்களில் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதையடுத்து அவி நாசி மது விலக்கு காவல் துறையினர் 8 லிட்டர் சாராயம், 30லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறி முதல் செய்து வழக்கு பதிந்து இதில் தொடர்புடைய செட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49), செல்வராஜ்(47) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.