16 வது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பிப். 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நெடுங்கம்பு, ஒற்றை கம்பு, நேரடி சண்டை ஆகிய பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை சிலம்பாலயா மாணவ, மாணவிகள் மொத்தம் 56 பதக்கங்களை வென்றனர். இவர்கள் அனைவரும் புலியகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்ற வளாகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிலம்பாலயா ஆசிரியர் டாக்டர் பி.செல்வக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.