tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி மேகாலய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த தஹில்ரமணி தனது இடமாற்றம் குறித்து மறுபரிசீலனை செய்யக்கோரி கொலிஜியத்திற்கு கடிதம் எழுதினார். ஆனால் கொலீஜியம் அவரது இடமாற்றம் குறித்து பரிசீலிக்க மறுத்தது. இதையடுத்து தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை வினீத் கோத்தாரி வகித்து வந்தார். இந்நிலையில் இன்று புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி நியமிக்கப்பட்டுள்ளார். 
மேலும் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக இருக்கும் சஞ்சய் கரோல் பாட்னா உயர்நீதிமன்றத்துக்கும் மேகாலயா தலைமை நீதியாக இருக்கும் ஏ.கே. மிட்டல் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.