tamilnadu

img

அரசு பள்ளியில் தமிழ்நாடு தினவிழா கொண்டாட்டம்

ஈரோடு, நவ. 2- புன்செய் புளியம்பட்டி, நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு வரைபட வடிவில் அமர்ந்து விழாவை உற்சாகமாக கொண்டாடினர். தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டதை முன்னிட்டு, நவம்பர் 1  ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி புன்செய் புளியம்பட்டி நேருநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் பாஸ்கோ தலைமை தாங்கினார். விடியல் சமூக நல  அறக்கட்டளை செயலாளர் எஸ்,ஜெயகாந்தன் தமிழ் நாடு உருவான விதம் குறித்து மாணவ மாணவியர்க ளுக்கு எடுத்துரைத்தார். இதையடுத்து மாணவ மாணவி யர்கள் அனைவரும் தமிழக வரைபட வடிவில் அமர்ந்து உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரி யர்கள், மாணவ மாணவியர் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.