ஈரோடு, டிச. 7- ஈரோடு மாவட்டத்தில் போக்கு வரத்து விதிமீறல் தொடர்பாக இரண்டே நாளில் காவல்துறை யினர் 1852 வழக்குகள் பதிவு செய் துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 13 இடங் களில் நிரந்தர வாகன சோதனை சாவடிகள் இயங்கி வருகிறது. இந்நி லையில் பாபர் மசூதி இடிப்பு தினத் தையொட்டி ஈரோடு மாவட்டத் தில் எவ்வித அசம்பாவித சம்பவங்க ளும் நிகழாத வகையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, மாவட் டம் முழுவதும் 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டு சோதனை செய்யப்பட்டது. மாவட்டத்தில் 133 தங்கும் விடுதி கள், 299 திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் சோதனை செய்யப் பட்டது. மேலும் 108பேர்குறித்து விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக, 5 ஆம் தேதி நடத் தப்பட்ட வாகன சோதனையில் மது போதையில் வாகனத்தை ஓட்டி யது, அதிவேகமாக ஓட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக 1500 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து 6 ஆம் தேதி இரண்டா வது நாளாக வாகன சோதனை மேற் கொண்டனர். இருநாட்கள் நடை பெற்ற சோதனையில் 1852 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டது.