tamilnadu

பள்ளி, கல்லூரிகளில் தோட்டக்கலை மன்றம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு,அக் 31- ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தோட்டக்கலை மன்றம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி  மாணவர்களிடையே தோட்டக்கலைப் பயிர்கள்  சாகுபடி குறித்தும், அவற்றை உட்கொள்வதால் ஏற் படும் நன்மைகள் குறித்தும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி களில் அமைக்கப்படும் தோட்டக்கலை மன்றங் களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் இரண் டாண்டுகளுக்கு  ரூ.10 ஆயிரம்  தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையின் மூலமாக வழங்கப்படும். இந்த  நிதியில் தோட்டம் அமைத்து பராமரிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும் சிறப்பாக செயல்படும் தோட்டக்கலை மன்றங்களுக்கு கூடுதல் சலுகைகள் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் மூலமாக வழங்கப் படும். விருப்பம் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அந்தந்த வட்டார  உதவி தோட்டக்கலை இயக்குநர்  அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அல்லது  www.tnhorticulture.tn.gov.in என்கிற இணைய தளத்திலோ விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அந்தந்த வட்டார உதவி தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.