tamilnadu

img

20 ஆண்டுக்குபின் பெண் வேட்பாளர் போட்டி

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 20 ஆண்டுக்குபின் பெண் வேட்பாளர் போட்டி

கொழும்பு, ஆக.30- இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் டாக்டர் அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டதன் பின்னர், இதுவரை ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரும் போட்டியிடவில்லை. 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளராக முதல் முதலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டிருந்தார். 1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில் 1999ஆம் ஆண்டே இறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டிருந்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க ஆகியோர் முழு மையான அரசியல் பின்புலத்தை கொண்டவர்கள்.டாக்டர் அஜந்தா பெரேரா நேரடி அரசியலில் பங்கேற்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.