tamilnadu

img

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 மையங்களில் போராட்டம்

விழுப்புரம், ஆக. 8- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக் குழுக் கூட்டம் 2019  ஆகஸ்ட்  6, 7 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்றது.  மாநிலக்குழு கூட்ட முடிவு கள் குறித்து மாநிலத் தலைவர்  என்.ரெஜிஸ்குமார், மாநிலச் செய லாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தகவல் அறியும் உரிமைச் சட்டம், தொழிலாளர் நலச் சட்டம்,  தேசிய புலனாய்வு முகமை சட்டம், சட்டவிரோத நடவடிக்கை கள் தடைச் சட்டம், திவால் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், நதி நீர் தாவா சட்டம், மருத்துவ ஆணைய மசோதா போன்ற சட்டங்களை மத்திய பாஜக அரசு  அவசர அவசரமாகத் திருத்து கிறது. நாட்டின் பன்முகத் தன்மை யைச் சிதைக்கும் வகையில் புதிய  கல்விக் கொள்கையைத் திணிக்க  முயற்சிக்கிறது. கல்வியை முற்றி லும் வியாபாரமாக்குவதுடன், இந்துத்துவாக் கொள்கைகளை மாணவர்களின் மூளையில் புகுத்தும் வகையிலேயே புதிய  கல்விக்கொள்கை வடிவமைக்கப்  பட்டுள்ளது. இவையனைத்திற்கும் உச்ச மாக ஜம்மு–காஷ்மீர் மாநிலத் திற்கு அரசியலமைப்புச் சட்டத் தின் படி வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை அவசர அவசரமாக ரத்து செய்துள்ளது. அந்த மாநிலத்தைத் துண்டாடி மத்திய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் இயங்கும் வகையில் யூனியன் பிரதேசமாக மாற்றி யுள்ளது. இதுநாள் வரையிலும் பாதுகாக்கப்பட்டு வந்த காஷ்மீ ரின் வளங்களை கார்ப்பரேட் முத லாளிகளுக்கு அள்ளிக் கொடுக் கும் நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சர்வாதிகார நடவ டிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

விடுதலைப் போராட்ட வீரர் கள் வ.உ.சிதம்பரனார் பிறந்த தினமான செப்டம்பர் 5 முதல் மகா கவி பாரதியார் நினைவு தின மான செப்டம்பர் 11 வரை சுகாதா ரம், குடிநீர், சாலைவசதி, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட மக்களின்  அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  1000 மையங்களில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்  பட்டது. சர்வதேச வேலை யின்மை எதிர்ப்பு தினமான செப் டம்பர் 15 அன்று, மத்திய மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும், தமிழ கத்தில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழக இளை ஞர்களுக்கு முன்னுரிமை வழங்க  வேண்டும், புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட வேலை வாய்ப்புக் கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து மாவட்டங்க ளிலும் கோரிக்கை மாநாடுகள், திறந்தவெளி கருத்தரங்குகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.