tamilnadu

img

அஞ்சல் துறையின் ஊழியர் விரோத நடவடிக்கைக்கு கண்டனம்

சென்னை, ஏப்.20- அஞ்சல் துறையின் ஊழியர் விரோத நடவடிக்கைக்கு  மத்திய  அரசு ஊழியர் மகா சம்மேள னத்தின் பொதுச் செயலாளர் எம்.  துரைப் பாண்டியன் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்  டிருக்கும் அறிக்கை வருமாறு:

நாடடெங்கிலும்  கொரோனா  தொற்றுநோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரு கின்றது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து முற்றி லுமாக முடக்கப்பட்டுள்ளது.  சென்னை உட்பட தமிழகத்தின்  பெரும்பாலான நகரங்கள்  சிவப்பு  மண்டலமாக தொடரும் நேரத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிராக, தமிழகத்தில்  பல்வேறு 

குறிப்பாக, அஞ்சல்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் முகக் கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி உட்பட எந்தவித முனெச்சரிக்கை பாதுகாப்பு சாத னங்கள் இல்லாமல் பணியாற்ற கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். போக்குவரத்து, உணவு போன்ற அடிப்படைவசதிகள் கூட  அவர்களுக்கு நிர்வாகத் தால் செய்துதரப்பட வில்லை. அஞ்ச லகங்கள் முறையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யா மல் ஊழியர்கள் பணியாற்றும் சூழ்நிலையுள்ளது.

அரசால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஊழியர்க ளும் போக்கு வரத்து வசதி யில்லாத காரணத்தினாலும், உடல் நலமின்றியும், வீட்டில் முடங்கியிருக்கும் ஊழியர்களும் பணிக்கு வர நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு பணிக்கு வர இயலாத  ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்ப டும் என பயமுறுத்தப்படு கிறார்கள்.

கொரோனா நோயின் வீரி யத்தையும், ஊழியர்களின் நலத்தையும், சுகாதா ரத்தையும் கவனத்தில் கொள்ளாமல் செயல்  படும் அஞ்சல்துறையின் ஊழியர்  விரோத போக்கை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. ஊழியர்களுக்கு நோயின் தாக்கம் ஏற்பட்டாலோ அவர்க ளின் உயிர்க்கு ஏதேனும் ஆபத்து  ஏற்பட்டாலோ,  அதற்கு மத்திய அரசும், அஞ்சல் துறையுமே முழு பொறுப் பேற்க வேண்டும். இவ்வாறு துரைப்பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.