tamilnadu

img

மாதர் சங்க நடைபயணத்துக்கு தடை-கைது: கி.வீரமணி-இரா.முத்தரசன் கடும் கண்டனம்

சென்னை, டிச. 5- பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், மதுக் கடைகளை மூட வும் கோரி வடலூர், திருவண்ணா மலை ஆகிய இடங்களில் இருந்து  சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை தாம்பரத்தில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய் துள்ளனர். அதிமுக அரசின் இந்த  கைது நடவடிக்கைக்கு திராவிடர்  கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலியல் வன் முறைகளைத் தடுக்க வேண்டும், மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற இரு கோரிக்கைகளும் அதிமுக அரசுக்கு உடன்பாடு அற்றவையா?

தடையை மீறினார்கள் என்ப தற்காக காவல்துறை அத்துமீறி நடந்துகொண்டிருப்பது கண்டிக்  கத்தக்கது. ஜனநாயகம், கருத்து ரிமை என்பதெல்லாம் பேணப்பட வேண்டியது சட்ட ரீதியான உரி மையாகும். அதிகாரத்தை தவ றாக பயன்படுத்தக் கூடாது” என்று  தெரிவித்திருக்கிறார்.

ஜனநாயக விரோதம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு  சார்பில் மாநிலச் செயலாளர் இரா.  முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் “வன்முறையும், போதையும் (மது) இல்லாத தமிழ கத்தை உருவாக்குவோம்” என்ற  முழக்கத்தை முன்வைத்து நவம்  பர் 25 முதல் நடைபயண இயக் கத்தின் மூலம் பரப்புரைப் பயணம்  மேற்கொண்டது. ஒரு வாரத்திற்கு  மேலாக எந்தவித அசம்பாவிதங்க ளுக்கும் இடமளிக்காமல் - பரப் புரை மேற்கொண்ட மாதர்கள் தலைமைச் செயலகத்தில் முதல மைச்சரை சந்தித்து கோரிக்கை களை முறையிட விருப்பம் தெரி வித்துள்ளனர். 

ஆனால், முதலமைச்சர் மக்  கள் அமைப்புகளையும், பிரதிநிதி களையும் சந்திக்க எந்தவித ஏற்பா டும் செய்யாமல், நடைபயணப் பரப்புரை மேற்கொண்டிருந்த மாதர்களை தமிழ்நாடு காவல் துறை வழிமறித்து, தள்ளுமுள்ளு நடத்தி, பலவந்தமாக கைது செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் உள்ள காவல்  துறை அரசியல் அமைப்புச்சட்டம்  வழங்கியுள்ள ஜனநாயக, மனித  உரிமைகளை பறித்து, சட்டமீற லில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அரசியல் கட்சி களும், வெகுமக்கள் அமைப்பு களும் முன்வைக்கும் கோரிக்கை களை தமிழ்நாடு அரசு காது  கொடுத்து கேட்கும் ஜனநாயக  நடைமுறைக்கு திரும்ப வேண்டும்  என வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.