tamilnadu

img

மக்களோடு மக்களாக இணைந்து நிற்போம்

தூத்துக்குடி, ஆக.10- தூத்துக்குடி மாவட்டத் தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க புதிய கட்டிடமான தோழர் எம்.ஆர்.அப்பன் இல்லம்-தோழர் டி.கே.சுந்தர பாண்டியன் அரங்கம் திறப்பு விழா, சங்க கொடி ஏற்றுதல் நிகழ்வுடன் தொ டங்கியது. மாநில பொருளா ளர் எம்.தங்கராஜ் கொடி ஏற்றி  வைத்தார். அகில இந்திய  சம்மேளனக் கொடியை அகில இந்திய துணைத்தலைவர் மொ. ஞானத்தம்பி ஏற்றினார். தோழர் எம்.ஆர்.அப்பன் இல்லத்தை முன்னாள் பொது செயலாளர் கே.ஆர். சங்கரன் திறந்து வைத்தார். முன்னாள் மாநிலத் தலை வர் நெ.இல.சீதரன் எம்.ஆர். அப்பன், படத்தை திறந்து வைத்தார். டி.கே.சுந்தர பாண்டியன் அரங்கத்தை மாநில தலைவர் (பொறுப்பு) ஆ.செல்வம் திறந்து வைத் தார். பொது செயலாளர் மு. அன்பரசு மாவட்ட அலுவல கத்தை திறந்து வைத்தார். வாழ்த்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் கலைஅரசன் தலை மை வகித்தார். கட்டடக் குழு தலைவர் ஜெகநாதன், வரு வாய் அலுவலர் சங்க மாவட் டச் செயலாளர் செந்தூர் ராஜன், ஊரக வளர்ச்சி அலு வலர் சங்க மாவட்ட செயலா ளர் அண்டோ, தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர்கள் சங்க தலைவர் வியாகுல புஷ்பம்விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வர வேற்புரை வழங்கி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் பேசினார்.  மாநில தலைவர் (பொறுப்பு) ஆ.செல்வம் பேசிய போது,  “தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தோன்றிய 06.05. 1984க்குப் பிறகு தான் இன்று ஊழியர்களின் உரிமைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த இடமும் கட்டிடமும் தோன்றியதற்கு வரலாறு பல உண்டு. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 25வது ஆண்டில் மக்களை நோக் கிய பயணம் என்ற அடிப்ப டையில் பயிற்சி வகுப்புகள், கிராமங்களை தத்தெடுப்பது, பணிக்கலாச்சார சீரமைப்பு, லஞ்சலாவண்யமற்ற முறை யில் மக்களுக்கு பணியை அர்ப்பணிப்பது என்ற பாதை யில் என்றும் போல் எழுச்சி யுடன் செயல்படும். அதற்கு இது போன்ற சங்க கட்டி டங்கள் பயிற்சி பட்டறையாக செயல்படும் என்பதில் ஐயமில்லை” என்றார். திறப்பு விழாவில் மாநில துணைத்தலைவர் குமாரவேல், எஸ்.பார்த்தி பன், மாநில செயலாளர் இராஜகுமார், கலைச் செல்வி உட்பட மாநில மாவட்ட, நகர ஒன்றிய நிர்வா கிகள் கலந்து கொண்டனர். விழாவில் 1985ம் ஆண்டு சிறை சென்ற முன்னாள் ஊழி யர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங் கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.