சென்னை, ஜூலை 29- முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை திருத்தும் மசோதாக்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், சேலம் உருக்காலை, பாதுகாப்புத் தொழிற் சாலைகள், ரயில்வே தனியார்மயம், பிஎஸ்என்எல் சீர்குலைப்பைக் கண் டித்தும் ஆகஸ்ட் 2ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தொமுச, சிஐடியு, எச்.எம்.எஸ்., ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கூட் டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் மாநி லத் தலைவர்களின் கூட்டம் சென்னை யில் பி.மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. வடபழனி டெப்போ விபத்தில் உயி ரிழந்த பாரதி, சேகர் ஆகிய தொழி லாளர்களுக்கும், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் சுகுமாறனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் முதலாளி களுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்த மத்திய அரசு தாக்கல் செய்து, கூட்ட நாட்களை நீட் டித்து அவற்றை நிறைவேற்ற முயல்வ தற்கு கூட்டம் கண்டனம் தெரிவித்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் வருமாறு: