நாகப்பட்டினம், பிப்.24- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், நாகை மாவட்டக் குழு சார்பில், மயிலாடு துறையில் சிறப்பு அறிதல் அரங்கம்’ நடைபெற்றது. முன்னதாக பத்திரிகை யாளர் ஞானி இயக்கிய ‘யார்?’ எனும் குறும்படம் திரையிடப்பட்டது. அறிதல் அரங்கிற்கு மாவட்டத் தலைவர் ந.காவியன் தலைமை வகித்தார். பொருளாளர் நா.இராஜாராமன் வரவேற்றார்.
‘அரசியல் அமைப்பின் முகப்புரை யைப் பாதுகாப்போம்’ எனும் பொரு ளில், தமுஎகச மாநிலத் தலைவர் (பொறுப்பு) கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். நிறைவாக மாவட்டச் செயலாளர் ப.பாலசுந்தரம் நன்றி கூறினார். மதுக்கூர் இராமலிங்கம் தனது உரையில் குறிப்பிட்டதாவது: அண்மைக் காலமாக பி.ஜே.பி.யின் மத்திய அரசு கொடிய சட்டங்களை இயற்றிக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் சிதைப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்கள் போன்றவற்றை எதிர்த்து தேசமெங்கும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக இஸ்லாமியர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை. தமிழ கத்தில் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகக் கூடாரங் களில் கடந்த 30 ஆண்டுகளாக வதைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்தே இன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சி.ஏ.ஏ. சட்டத்தை நாங்கள் அமல் படுத்த மாட்டோம் என்று இந்தியா விலேயே முதன் முதலில் சட்ட மன்றத்தில் சட்டம் இயற்றியது கேரள மாநிலம் தான். இந்த தைரியம் ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை? ஏனெனில், இவர்கள் மோடியின் அடிமைகள்.
இந்தக் கணக்கெடுப்பில் 21 கேள்வி கள் கேட்கப்படுகின்றன. தேசத்தில் வீடற்று, முகவரியில்லாமல் லட்சக் கணக்கானோர் வீதிகளில் அலை கிறார்கள். நரிக்குறவர் இனமக்கள் போன்றவர்கள் நாடோடிகளாக இருக் கிறார்கள். இவர்களிடம் போய் நீங்கள் என்ன கணக்கெடுப்பீர்கள்? அசாமில் 19 லட்சம் பேர் நாடற்றவர்களாகத் தடுப்பு முகாம் களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் களுள், முன்னாள் குடியரசுத் தலை வர் பக்ருதீன் அலி அகமதுவின் பேரர் களும் அடங்குவர். ஒரு முன்னாள் ஜனாதிபதியின் பேரர்களுக்கே இந்த கதி என்றால், மற்றவர்களின் கதி என்னவாகும்?
மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர் பகதூர் ஷா. ஆங்கி லேயருக்கு அடிபணியாமல், கப்பம் கட்ட மறுத்ததற்காக, அவரின் மூன்று குழந்தைகளின் தலைகளை வெட்டி, பகதூர் ஷா-வின் உணவுத் தட்டில் வைத்தார்கள். இப்போதாவது கப்பம் கட்டுகிறாயா இல்லை, மீதியுள்ள உனது இரண்டு குழந்தைகளின் தலை களையும் இப்படிக் காட்சிக்கு வைக் கட்டுமா என்றான் ஆங்கிலேயன். அப் படியும் அச்சப்படவில்லை பகதூர் ஷா. கடைசியில், அவரை பர்மா வுக்கு நாடு கடத்தினார்கள். அப்போது, பகதூர் ஷாவின் ஒரு கை மூடியே இருந்தது. அங்குள்ளவர்கள் கேட் டார்கள், ஏன் ஒரு கையை எப்போதும் மூடியே வைத்துள்ளீர்கள்? என்று. அப்போது பகதூர்ஷா தன் கையைத் திறந்து காட்டினார். இது எனது இந்தியத் தாய் நாட்டின் மண். நான் எந்த நாட்டிற்குக் கடத்தப்பட்டாலும் இந்த மண்ணை விட்டுப் பிரிய மாட்டேன் என்றார் பகதூர்ஷா.
மதுரைப் பகுதியில் மருதநாயகம் என அழைக்கப்பட்ட கான்சாகிப் என்ற இஸ்லாமியரைக் கைகள், கால்கள், தலை, உடல் எனத் தனித்தனியாக வெட்டி வேவ்வேறு இடங்களில் புதைத்தார்கள். திப்பு சுல்தான் இறுதி வரை பணியாமல் எதிர்த்துப் போராடி னார். இன்று போராட்டக் களங்களில் இஸ்லாமியர்கள் தேசியக் கொடி யைப் பிடித்துக் கொண்டு போராடு கிறார்கள் என்றால், அந்த மூவர்ணக் கொடியை வடிவமைத்ததே ஒரு முஸ்லிம் தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வண்ணாரப்பேட்டையில் இஸ்லா மியப் பெருமக்கள் 24 மணி நேரமும் போராட்டக் களங்களில் நிற்கிறார்கள். அவர்கள் அங்கேயே தொழுகை நடத்துகிறார்கள். அவர்களின் தொழு கைக்கு எவ்விதப் பங்கமும் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்துக்கள், தமிழர்கள் சுற்றிலும் அரணாக நின்று கொண்டார்கள்.
தொழுகை முடிந்ததும் அரணாக நின்ற மக்கள் இஸ்லாமியர்களிடம் கூறி னார்கள். உங்கள் தொழுகைக்கு மட்டு மல்ல, நாங்கள் உங்கள் வாழ்விலும் அரணாக நின்று உங்களைப் பாது காப்போம் என்று. இது தான் தமிழ கம், இது தான் இந்தியா. எத்தனை மோடிகள், அமித்ஷாக்கள் வந்தாலும் இந்தப் பாசத்தை, மக்களின் இந்த ஒற்றுமையைப் பிரித்து விட முடி யாது. இவ்வாறு மதுக்கூர் இராமலிங்கம் கூறினார்.