கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறி
திருவள்ளூர், ஆக. 25 - கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மேலும் ஒரு ஊராட்சி மன்ற இருளர் இன பெண் தலைவரை தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுக்கப் பட்ட அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு நடை பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள நேமளூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக் குள் பெரிய பொம்மாசிக்குளம், சின்ன பொம்மாசிக்குளம், சக்கிலி பாளையம், சரஸ்வதி நகர், தாதை யர் கண்டிகை, ரோஷ்னாநகர் உள் ளிட்ட கிராமங்கள் உள்ளன. 9 வார்டு களை கொண்ட இந்த ஊராட்சிக்குள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக மாலா சேகர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந் தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது சுழற்சிமுறையில் நேமளூர் ஊராட்சி எஸ்.டி பெண் தொகுதியாக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் வில்லியர்ஸ் காலனியில் வசிக்கும் இருளர் இனத்தை சேர்ந்த கோவிந் தம்மாள் (45) தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். இதனை சாதிய ஆதிக்க சக்திகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் சுதந்திர தினத் தன்று ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் தேசிய கொடியை ஏற்றுவதற்கு முன்பு, சாதி ஆதிக்க சக்தியான 5வது வார்டு உறுப்பின ரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலை வரின் கணவருமான சேகர் என்பவர் தேசிய கொடியை ஏற்றினார். இதற்கு சில வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு தொடர்ந்து நான்தான் கொடியை ஏற்றி வருகி றேன் என்று தேசிய கொடியை ஏற்றியுள்ளார். (அதாவது, சேகர் மனைவி மாலா தான் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். அப்போதும் பெண் தலைவரை தேசிய கொடி ஏற்றவிடா மல் தானே ஏற்றியதாக கூறுகிறார். இதனை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை)
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு
இந்த தகவலை அறிந்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராய ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொருளாளர் இ.மோகனா, மாவட்டத் தலைவர் இ. எழிலரசன், செயலாளர் த.கன்னி யப்பன், பொருளாளர் ஆர்.சிவக் குமார், வழக்கறிஞர் கே.சுதர்சனம் ஆகியோர் திங்களன்று (ஆக.24) நேமளூர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக்குழுவினர், ஊராட்சி நிர்வாகத்தில் கணக்கு வழக்கு போன்றவற்றில் மற்றவர்கள் தலை யிடுவதை தடுக்க வேண்டும், ஒவ் வொரு முறையும் எஸ்.சி, எஸ்.டி தலைவர்களாக உள்ள ஊராட்சியில், அவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரி மைகளை தடுப்பதை அதிகாரிகள் தலையிட்டு சரி செய்ய வேண்டும், இருளர் இனத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த சாதி ஆதிக்க சக்தியான வார்டு உறுப்பி னர் சேகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், வட்டார வளர்ச்சி அதி காரிகள் முறையாக ஊராட்சிகளை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்குமா?