tamilnadu

img

தீபாவளிக்காக 2 நாளில் 2.67 லட்சம் பேர் பயணம்

 சென்னை,அக்.26- தீபாவளி பண்டிகைக் காக இரண்டே நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர்  சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களாக சென்னை யிலிருந்து சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானி டோரியம் பேருந்து நிலை யம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவ ரம், பூவிருந்தவல்லி மற்றும்  கே.கே.நகர் பேருந்து நிலை யம் ஆகிய இடங்களி லிருந்து புறப்பட்ட இந்த  பேருந்துகளில் ஆயிரக் கணக்கானோர் பயணித்த னர்.

குறிப்பாக தென்மாவட் டங்களுக்கு சென்ற பேருந்து களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயம் பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிக ரித்ததால் 600க்கும் மேற் பட்ட காவலர்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.