சென்னை, செப். 28- மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அர சாணையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்க ளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்ச வரம்பு என்பது ரூ. 21 ஆயிரம் என்று நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு 2018-2019-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்பட உள்ளது. மேலும், போக்குவரத்து துறை, டி.என்.இ.பி., தமிழ் நாடு தேயிலை கார்ப்பரேஷன், அரசு ரப்பர் கார்ப்ப ரேஷன் லிமிடெட், தமிழ்நாடு வனத்தோட்ட கார்ப்ப ரேஷன், நிர்வாகத்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆண்டை போன்று தனித்தனியே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.