tamilnadu

img

இமாச்சல் பிரதேசத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

இமாச்சல் பிரதேசத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.