tamilnadu

img

இந்தோனேசியா: பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி

இந்தோனேசியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கார் நகரில் ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.  இந்நிலையில், திடீரென பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது   பாலத்தின் மீது 30 பேர் வரை இருந்துள்ளனர். விபத்தின்போது சிலர் ஆற்றில் மூழ்கினர்.  இந்த விபத்தில்  7 பேர்  பலியாகி உள்ளனர்.  3 பேரை காணவில்லை.  சில மாணவர்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.  சிலர் பாலத்தில் தொங்கியபடி இருந்துள்ளனர்.  ஆற்றில் கனமழையால்  வெள்ள பெருக்கு காணப்பட்டது.  இதனால் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலான பருவமழை பொழிவால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இந்த மாதத்தில் 67 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;